நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு
திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை
பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோ கேட்க வைக்கிறது
இந்த இரவு
கவிஞர் - பழநிபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment