
அன்று அலுவலகம் முடிந்து மாநகர பேருந்தில் வீடு சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. என் அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. வீடு வேளச்சேரியில் உள்ளது. நந்தனத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. நான் படிக்கட்டில் இருந்து இறங்கிக் கொண்டேன். ஏற வேண்டிய ஏறிக் கொண்டார்கள். இறங்க வேண்டிய பயணிகள் இறங்கிக் கொண்டார்கள். நான் மறுபடியும் படிக்கட்டில் ஏறி பக்கத்தில் உள்ள கம்பியைப் பிடித்துக் கொணடேன். நான் கம்பியில் கையை வைக்கும்போது தெரியாமல் வேறொரு கையின் மீது பட்டுவிட்டது. சட்டென்று கையை விலக்கிக் கொண்டேன். பிறகு அந்த கை யாருடையது என்று திரும்பிப் பார்த்தேன். அது ஒரு அழகிய இளம்பெண்ணின் கை. அவளுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்க வேண்டும். சுடிதார் அணிந்திருந்தாள். சட்டென்று திரும்பிக் கொண்டேன். அவளுடைய முகத்தை ஒழுங்காகக் கூட பார்க்கவில்லை. ஆனால் அவள் அழகாக இருந்தாள். அது மட்டும் தெரியும்.
பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த அழகிய இளம்பெண்ணின் கையும் எனது கையும் பக்கத்தில் பக்கத்தில்தான் இருந்தன. சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் சுண்டுவிரல் மீது எனது கையை வைத்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை. பிறகு மெல்ல எனது அனைத்து விரல்களையும் அவளின் விரல்களின் மேல் படர்வது போல் வைத்துக் கொண்டேன். ஆனாலும் அவள் ஒன்றும் செய்யவில்லை. அவளது கையை மிருதுவாக தடவிக் கொண்டே வந்தேன். அப்படி செய்ய எனக்கு எப்படி தைரியம் வந்தது என்று தெரியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சட்டென்று கையை விலக்கிக் கொண்டேன். ஆனால் சற்று நேரத்தில் அவள் தன் மிருதுவான விரல்களை என் விரல்களின் மேல் வைத்தாள். என் மனதிற்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. ஏதோ ஒருவித இனம்புரியாத சந்தோசம். அதை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம். அவளுடைய முகத்தைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. ஆனால் கடைசிவரை பார்க்கவில்லை. கூச்சமா; பயமா; அல்லது பயம் கலந்த கூச்சமா என்று தெரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும். கண்டிப்பாக பார்த்திருப்பாள். பேருந்து வேளச்சேரி பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. நான் இறங்கிக் கொண்டேன்.

சற்று தூரம் நடந்தபின் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னைப் பார்ப்பது தெரிந்தது. ஆனால் அவள் முகத்தை என்னால் ஒழுங்காய் பார்க்க முடியவில்லை. பேருந்தின் பின்புற கண்ணாடி அவளின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்கலாம் போலிருந்தது. என்னை நானே நொந்து கொண்டேன். சிறிது நேரத்தில் பேருந்து நகர்ந்து சென்றுவிட்டது. நானும் வீடு போய் சேர்ந்தேன். அன்று முழுவதும் அவள் நினைவாகவே இருந்தது.
மறுநாள் அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு அழகிய இளம்பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளைப் பார்த்தேன். சட்டென்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நாம் நேற்று பேருந்தில் பார்த்த பெண்ணாக இருக்குமோ?. அவளிடம் சென்று பேசலாமா?....இல்லை வேண்டாமா?....என்று நினைத்துக் கொண்டிருக்கையில்...அப்போது வந்த ஒரு பேருந்தில் ஏறி சென்றுவிட்டாள். அடுத்து வந்த பேருந்தில் ஏறி நான் வீடு திரும்பினேன். அன்று முழுவதும் மனம் ஏதோ பாரமாய் இருப்பதைப் போல உணர்ந்தேன். சரியாக தூங்க முடியவில்லை. அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு நாள் செல்ல செல்ல அவளின் ஞாபகங்கள் என்னுள் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. ஆனால் முழுவதுமாய் இல்லை. இன்றுவரை....
No comments:
Post a Comment